Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பள்ளிபாளையம் : தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய்யின், லியோ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தமிழகம் முழுவதும் வெளியானது.
படத்தின் டிரைலர் வெளியிட்ட நாள் முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்த நிலையில், அதிகாலை 4 மணிக்கு காட்சிகள் வெளியிடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டுமென படக்குழு தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் நீதிமன்றம் அதனை மறுத்து காலை ஒன்பது மணி காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி அளித்தது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள மூன்று திரையரங்கங்களிலும் லியோ திரைப்படம் வெளியிடப்பட்டது. மேலும் அரசு பொது விடுமுறை நாள் ஏதும் இல்லை என்பதாலும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை இல்லை என்பதாலும் ரசிகர்கள் கூட்டம் மட்டுமே திரையரங்கில் இருந்தது. ஒரே ஊரில் மூன்று திரையரங்கில் ஒரே திரைப்படம் திரையிடப்பட்டதால் போதுமான ரசிகர்கள் ஏதும் இன்றி மிகக் குறைந்த அளவிலே முதல் காட்சியை பார்க்க கூட்டம் இருந்தது.
இதன் காரணமாக வழக்கமாக விஜய் திரைப்படங்கள் வெளியாகும் போது உள்ள உற்சாகம், பரபரப்பு இந்த முறை சற்று குறைவாகத் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படத்தை பார்த்த ரசிகர்கள் படம் சற்று நீளமாக இருப்பதாகவும் படம் நன்றாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்தனர்.